கொற்றிகோடு வரலாற்று சிறப்பும் பெயர் காரணமும்
முச்சங்கம் வைத்து தமிழ்வளர்த்த சேர,சோழ,பாண்டிய மூவேந்தருள் முதன்மை பெற்ற சேர நாட்டின் தென் பகுதியில், கடல் கொண்ட லெமுரியா கண்டத்தின் எஞ்சிய பகுதியாக நின்று, இன்று முக்கடல் முத்தமிட, முத்தமிழ் கொந்தளிக்க , நஞ்சையும் , புஞ்சையும் கொஞ்சி விளையாடிReadmore...
குமரி மாவட்டத்தில் பெருகி வரும் வரதட்சனைகள்
திருமணத்திற்கு தேவையான தாலி, உடை ,செருப்பு இவை அனைத்தையும் மாப்பிள்ளை தான் கொண்டு செல்கிறான் ஆனால் அதை வாங்கிய காசு அனைத்தும் அவனுடையது அல்லReadmore...
கொற்றிகோட்டை கலக்கிய லக்கி ஸ்டார் மகிழ்ச்சி விழா
ஆண்டு தோறும் டிசம்பர் கடைசி நாளும் ஜனவரி முதல் நாளும் இயக்க ஆண்டு நிறைவு விழாவும் அடுத்த ஆண்டின் துவக்க விழாவும் கொண்டாடுவது வழக்கம் . அதே போல் இந்த ஆண்டும் மிக சிறப்பாக இந்த இரு விழாக்களும் நடந்தேறின Readmore...
Welcome
Do you feel Nature is dying out? cool... Welcome to Kotticode Readmore...
Republic Day
Republic Day celebration at kotticode Readmore...
Monday, October 3, 2022
Sunday, April 12, 2020
லக்கி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக கொற்றிகோட்டில் கபசுர குடிநீர் வழங்க பட்டது
கொற்றிகோடு லக்கி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக கொரானா நோயை தடுக்கும் விதமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக கபசுர குடிநீர் வழங்க பட்டது.
கொற்றிகோடு சி எஸ் ஐ ஆலயத்தின் முன்பு வைத்து மக்களுக்கு விநியோகிக்க பட்டது. இதில் ரேசன் கடைக்கு வந்தவர்களுக்கும் வழங்க பட்டது. மேலும் சரல் விளை, குழி வினை, சுனைப்பாற விளை, கன்றுபிலா விளை ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 1500 பேருக்கு வீடு வீடாக சென்று வழங்க பட்டது..
இந்நிகழ்விற்கு கிளப் தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். கிளப் ஒருங்கிணைப்பாளர்கள் லிவிங்ஸ்டன், ஜெரின் கில்பட், லாறன்ஸ், செலின் குமார், மெல்வின் தாஸ் கிளப் துணை தலைவர் எட்வர்ட் சேம்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் கிளப் துணை தலைவர் அஜின், கிளப் துணை செயலாளர்கள் லிங்ஸ்டன் ஜோஸ், ஷிஜோ, விபின் ஜோஸ், ஜாண் ரிக்சன், சேம் ராஜ், விஜய குமார், ஜோதி பிராங்க் டெல்பின், ஜெட்லின் , தங்கம், மெல்பின் ஜோஸ் உள்ளிட்ட பலர் சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்து கொண்டனர்.
Thursday, April 9, 2020
கொற்றிகோட்டில் கபசுர குடிநீர் விநியோகம்
கொற்றிகோட்டு பகுதியில் இன்று பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்க பட்டது. கொரானா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் பரவி இருக்கும் நேரத்தில் இந்தியா முழுவதும் கொரானா தொற்று அதிகரிக்காமல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் வழங்க படுகிறது.
தன்னார்வலர்கள் அங்காங்கே மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி வருகின்றனர். இன்று கொற்றிகோட்டில் கபசுர குடிநீர் வழங்க பட்டது. இதில் ஜெப ராபின், லூஜின், தாஸ் ,பெர்லின் ஜோஸ் ஆகியோர் மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர்
Wednesday, April 8, 2020
கொற்றிகோடு சேகர சபையின் புனித செவ்வாய் ஆராதனை
தற்போது உலகம் முழுவதும் கொரானா வேகமாக பரவி வருவதால் இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு நிலுவையில் உள்ளதால் மக்கள் நேரடியாக ஆலய ஆராதனையில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
மக்கள் ஆலயத்திற்கு வர இயலாமல் இருந்தாலும் வீட்டிலிருந்தே ஆலய ஆராதனையில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக இணைய தளங்களில் பதிவேற்றி வருகிறோம். இந்த வாரம் புனித வாரமாக இருப்பதால் இந்த வாரம் தினமும் ஆராதனை நடைபெறும். சேகரத்து போதகர் அருள்திரு. டேவிட் றாபி ஜேக்கப் தலைமையில், இரண்டாம் போதகர் அருள்திரு போவாஸ் முன்னிலையில் ஆராதனை நடைபெற்றது. ஆலயம் வர முடியவில்லை என்றாலும் வீட்டிலிருந்தே ஆராதனையில் பங்கேற்று இறையாசி பெற சபைக்குழு சார்பாக வேண்டுகிறோம்.
Subscribe to:
Posts (Atom)