Wednesday, June 12, 2019

கொள்ளை கொள்ளும் இயற்கை அழகு பண்ணி பொத்தை

கொற்றிகோடு பகுதியை சுற்றிலும் மலைகள் சூழ்ந்து காணப்படும்.  இதில் உயரமான மலையாக வேளிமலை திகழ்கிறது.  

கொற்றிகோட்டை அடுத்து பெருஞ்சிலம்பு அதை தொடர்ந்து பண்ணி பொத்தை என்ற இடம் உள்ளது.  இது ஒரு மலையும் மலை சார்ந்த இடமாக காணப்படுகிறது.  இந்த பகுதி மலை என்பதை விட பொத்தை என்று சொல்லும் வண்ணம் சிறு சிறு மலை முகடுகள் காணப்படுகின்றன.  

பொதுவாகவே இந்த பகுதியில் உள்ள பெயர்கள் அனைத்துமே காரண பெயராகவே காணப் படுகிறது.  பண்ணி பொத்தைக்கு எதாவது காரண பெயர் இருக்கிறதா என்று இலக்கியங்களில் தேடிய போது ஒரு காலத்தில் பண்ணி என்ற ஒரு அரசன் வாழ்ந்து வந்திருக்கிறான். அந்த அரசன் மலை பகுதியை தன் நாடாக கொண்டவன் என்று குறிக்க பட்டுள்ளது.  

இந்த வரலாறை பார்க்கும் போது அந்த அரசனின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக பண்ணி பொத்தை இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது.  

மொத்தத்தில் பண்ணி பொத்தை இயற்கையின் வரம் என்று தான் சொல்ல வேண்டும்..  

பட உதவி : ஜெனிபர் 

0 comments:

Post a Comment

Updates Via E-Mail