Tuesday, May 7, 2019

சாதி, மூடநம்பிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர் கால்டுவெல்


திருநெல்வேலி,:  தமிழகத்தில் நிலவிய சாதி, மூடநம்பிக்கைகளுக்கு எதிராக தமிழறிஞர் கால்டுவெல் குரல் கொடுத்தார் என பாளை.யில் நடந்த கருத்தரங்கில் பாலபிரஜாபதி அடிகளார் தெரிவித்தார்.    நெல்லை பல்கலை., டிடிடிஏ., நெல்லை மண்டலம், அவ்வை நுண்கலைக் கல்லுாரி சார்பில் தமிழறிஞர் பேராயர் கால் டுவெல் நினைவு தின கருத்தரங்கம் பாளை.யில் நடந்தது. 


கருத்தரங்கிற்கு நெல்லை அவ்வை நுண்கலைக் கல்லுாரி  தாளாளர் ஓவியர் சந்துரு தலைமை வகித்தார். நெல்லை பல்கலை., வரலாற்று துறை தலைவர் ராமசுப்பிரமணியன், சாராள் தக்கர் கல்லுாரி தாளாளர் சாம்சன் பால்ராஜ், ஜான்ஸ் கல்லுாரி செயலர் ஜார்ஜ்கோசல் முன்னிலை வகித்தனர். டிடிடிஏ., தொடர்பு துறை இயக்குநர் கிப்சன் ஜான்தாஸ் வரவேற்றார். எழுத்தாளர் சேவியர் அறிமுகவுரை ஆற்றினார். 

கருத்தரங்கை நெல்லை பல்கலை., துணை வேந்தர் பாஸ்கர் துவக்கி வைத்து பேசுகையில், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள்  தமிழில் பேசுவது குறைந்து வருகிறது. தமிழ் மொழி சிறப்பையும், தொன்மையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். நமது கலாச்சாரம், பண்பாடு, இலக்கியத்தை தமிழ் மொழியில் கற்பதோடு, அதன் சிறப்பை பிற மொழி பேசுபவர் களிடம் எடுத்துக் கூற வேண்டும். கால்டு வெல் தியாக உணர்வோடு தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்டார் ’என்றார். 

சாமிதோப்பு அய்யாவழி சபை பாலபிரஜாபதி அடிகளார் பேசுகையில்,  உலகில் உள்ள அனைத்து நாட்டு மக்களும் தாய் மொழியில் கற்கின்றனர். நம் நாட்டில் மட்டும் அந்த நிலையில்லை. இந்த நிலை மாற வேண்டும். நெல்லை பல்கலை., கால்டுவெல் போன்ற மிழறிஞர்களுக்கு விழா எடுத்து ,அவர்களின் சமூக பணிகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் பணியை சிறப்பாக செய்து வருவதால் ஜீவன் உள்ள பல்கலை.யாக திகழுகிறது. 

கேரள மாநி லம் திருவனந்தபுரத்தில் கால்டுவெல் வசித்த வீடு சேதமடைந்த நிலையில் உள்ளது. அதை புதுப்பிக்க வேண்டும் என கேரள முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளேன். அதுபோல் தமிழக அரசு, மத்திய அரசும் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதி, மூடநம்பிக்கைகளுக்கு எதிராக கால்டுவெல் குரல் கொடுத்தார். தமிழும், தமிழ் மக்களும் வாழ தனது கடைசிநநாள் வரை கால்டுவெல் பாடுபட்டார் ’என்றார். 

 கருத்தரங்கில்  எம்.பி., விஜிலா சத்தியானந்த், பாளை., கத்தோலிக்க மறை மாவட்ட முதன்மை குரு சேவியர் டெரன்ஸ், டிடிடிஏ., நெல்லை திருமண்டல உப தலைவர் பில்லி, குருத்துவ செயலர் ஸ்டீபன் செல்வின்ராஜ், லே செயலாளர் வேதநாயகம், பொருளார் தேவதாஸ் ஞானராஜ் உட்பட பலர் வாழ்த்துரை வழங்கினர்.  கருத்தரங்கில்நெல்லை பல்கலை., பதிவாளர் ஜான் டி.பிரிட்டோ  ‘டாக்டர். கால்டுவெல் வாழ்வும் பணியும் என்ற நுாலை வெளியிட்டார். 

நிகழ்ச்சியில் சாராள் தக்கர் கல்லுாரி பேராசிரியை தங்கம், பாளை., ஜான்ஸ் கல்லுாரி முதல்வர் ஜான்கென்னடி வேதநாதன் உட்பட பலர் கருத்துரை வழங்கினர்.  கருத்தரங்கில்  பெங்களூரு இந்திய தொல்லியல் துறை ஆணையர் அறவாழி மற்றும் மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், சேகர குருக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments:

Post a Comment

Updates Via E-Mail