வரலாற்று சிறப்புமிக்க கொற்றிகோடு பெயரில் கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட வேண்டும்

குமரி மாவட்டம் கல்குளம் தாலுகா கோதநல்லூர் கிராமம் சமீபத்தில் இரண்டாக பிரிக்க பட்டு கோதநல்லூர் கிராமம் என்றும் குமாரபுரம் கிராமம் என்றும் செயல்பட்டு வருகிறது.

குமாரபுரம் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு தனியாக அலுவலகம் கட்டபட்டு திறக்க பட்டுள்ளது  இந்நிலையில் இப்பகுதி மக்கள் சார்பாக குமாரபுரம் கிராம நிர்வாக அலுவலகத்தின் பெயரை வரலாற்று சிறப்புமிக்க கொற்றிகோடு பெயரில் அமைக்க வேண்டும் என்பது.  

ஏற்கனவே கொற்றிகோடு காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது.  கொற்றிகோடு என்பது குமரி கண்டத்தின் ஒரு பகுதியான குமரி கோடு என்பதை குறிப்பிடும் இடமாகும்.  கொற்றிகோடு எல்லையானது பெருஞ்சிலம்பு முதல் முட்டைகாடு வரை பரந்த இடமாகும்.  குமாரபுரம் என்பது சந்திப்பின் பெயர் தானே தவிர ஊரையோ வரலாற்றையோ குறிக்கும் பெயர் அல்ல.

கிராம நிர்வாக அலுவலகம் மட்டுமல்லாது பேரூராட்சி அலுவலகத்தின் பெயரையும் கொற்றிகோடு என மாற்ற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்..  

Comments