Tuesday, September 16, 2014

கொற்றிகோட்டில் மாவட்ட அளவிலான கிளியாந்தட்டு போட்டி

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஓன்று கிளியாந்தட்டு. இந்த விளையாட்டு கிராம புறங்களில் இளைஞர்கள் விளையாடி வருகிறார்கள். கிராம புறங்களில் விளையாடிய விளையாட்டானது இன்று சர்வதேச அளவில் விளையாட பட்டு வருகிறது. இந்திய அளவில் இந்த விளையாட்டு அட்யா பட்யா என்ற பெயரில் விளையாட பட்டு வருகிறது. இந்திய அரசு இந்த விளையாட்டை விளையாட்டு வரிசையில் சேர்த்து அங்கீகரித்துள்ளது. 
விளையாட்டு போட்டியை துவங்கி வைத்த போது

இந்நிலையில் 13-09-2014 அன்று குமரி மாவட்ட அளவிலான கிளியாந்தட்டு போட்டி கொற்றிகொட்டில் வைத்து நடத்தப்பட்டது. இந்த போட்டியை மாவட்ட கிளியாந்தட்டு கழகத்தோடு இணைந்து கொற்றிகோடு லக்கி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் ஜே சி ஐ நாகர்கோவில் கிங் மூலம் நடத்த பட்டது. 

குமரி மாவட்டத்தில்   பல்வேறு இடங்களில் இருந்து 8  அணிகள்  பங்கேற்றன. ஒவ்வெரு அணியும் மிக சிறப்பாக விளையாடியது. இந்த போட்டியில் மிக சிறப்பாக விளையாடிய கொற்றிகோடு லக்கி ஸ்டார் அணி சுழற் கோப்பையை தட்டி சென்றது. இந்த விளையாட்டு போட்டியை நாகர்கோயில் பொன்ராம் இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் அரிராம ஜெயம் துவங்கி வைத்தார்.

இந்த நிகழ்விற்கு கிளப் தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். ஜெசிஐ செயலாளர் ஷாஜி , கொற்றிகோடு லக்கி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் ஒருங்கிணைப்பாளர் லிவிங்ஸ்டன் , கணக்கர் சேம் ராஜ் மாவட்ட அட்ய பட்யா செயலாளர் ஜெயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வெற்றிபெற்ற அணி வீரர்களுக்கு ஜெசிஐ மண்டல இயக்குனர் கண்ணன் அவர்கள் பரிசுகளை வழங்கினார்கள்.
பரிசு வழங்கிய போது

அழிந்து போகும் தருவாயில் இருக்கும் கிராமிய விளையாட்டுகளை கொற்றிகோட்டில் அறிமுக படுத்தி  புதுப்பித்து வருகின்ற கொற்றிகோடு லக்கி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் உறுப்பினர்களை பொதுமக்கள் பாராட்டியதோடு இந்த விளையாட்டை கண்டு கழித்து விளையாட்டு வீரர்களை ஊக்குவித்தனர்.. 

இன்னும் புகைப்படங்களை பார்க்க இங்கே அழுத்தவும்  

0 comments:

Post a Comment

Updates Via E-Mail