Friday, April 22, 2011

கொற்றிகோட்டில் ஐக்கிய கிறிஸ்தவ சிலுவை பாதை பவனி

இன்று உலகம் முழுவதும் புனித வெள்ளியாக கிறிஸ்தவர்கள் அனுசரித்து வருகின்றனர். இயேசுவை சிலுவையில் அறைந்த நாளை நினைவு கூறும் விதமாக கிறிஸ்தவர்கள்  சிலுவையை சுமந்து நினைவு கூறி வருகின்றனர். கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இயேசு சிலுவையை சுமந்து கல்வராயன் மலைக்கு சென்ற போது நடைபெற்ற ஒவ்வெரு நிகழ்வுகளையும் நினைத்து அனுசரித்து வருவார்கள்.

கொற்றிகோட்டில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களும் தென்னிந்திய திருச்சபையினரும் சேர்ந்து ஐக்கிய சிலுவை பாதை பவனியாக நடத்தி வருகின்றனர். இதில் புனித மிக்கேல் அதி தூதர் ஆலயம், கொற்றிகோடு தென்னிந்திய திருச்சபை, சோலாபுறம் புனித பத்தாம் பத்தி நாதர் ஆலயம், பட்டன் விளை தென்னிந்திய திருச்சபை ஆகிய திருச்சபைகள் இணைந்து இயேசுவின் சிலுவை மரணத்தை நினைவு கூறுகின்றனர்.

எல்லா ஆண்டும் மதியம் இரண்டு மணி முதல் மாலை ஐந்து மணி வரை நடைபெறும் மும்மணி தியானம் சிலுவை பாதை பவனிக்காக கொற்றிகோடு திருச்சபையில் இன்று காலை நடத்த பட்டது. இதில் சிலுவையில் இயேசு தொங்கிய போது பேசிய ஏழு வாரத்தைகள் பற்றி ஏழு பேர் செய்தி கொடுத்தார்கள்.


அனைத்து திருச்சபை மக்களும் மிக்கேல் நகர்(பனன்காலை) புனித மிக்கேல் அதி தூதர் ஆலையத்தில் கூடி அங்கிருந்து முட்டைகாடு சென்று குமாரபுரம் வந்து இடையிடையே ஒவ்வெரு நிலைகளிலும் அந்த நிலை குறித்த செய்தியும் தியானமும் செய்யப்பட்டு கொற்றிகோடு காவல் நிலையம் சென்று மீண்டும் குமாரபுரம் வழியாக கொற்றிகோடு ஆலயம் முன்னிருக்கும் 9 வது நிலையை முடித்து சொலாப்புறம் புனித பத்தாம் பத்தி நாதர் ஆலயத்தில் நிறைவு செய்தனர்.



இயேசுவின் பாடு மரணம் குறித்த தியான பாடல்களை பாடிய வண்ணம் பவனி சென்று கொண்டிருக்கிறது. அமைதியும் ஒருவித சோர்வும் தியாகமும் வெளிகாட்டும் விதமாக பவனியில் பங்கேற்றவர்கள் இருந்தார்கள். கடந்த வாரம் நடத்திய குருத்தோலை பவனியிலிருந்தும் இது மிகவும் வித்தியாசத்தொடு காட்சியளித்தது.


ஒன்பது முறை விழுந்தவனை பார்த்து பூமி சொன்னதாம் நீ எட்டு முறை எழுந்தவன் தானே என்று” பவனியின் போது நினைவூட்ட பட்ட இந்த வரிகள் தன்னம்பிக்கையையும் தோல்வி என்பது ஒரு வித வெற்றி தான் என்பதை நினைவூட்டியது. 

2 comments:

Selvaraj said...

புனித வெள்ளியில் இந்த பதிவை வெளியிட்டது சிறப்பு!

Kiruba Daniel said...

good work.... :)

Post a Comment

Updates Via E-Mail