Monday, December 21, 2009

வெற்றி கரமான 11 வது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டங்கள்


இயக்கத்தின் 11 வது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டங்கள் துவங்கிய நிலையில் அதற்குரிய வேலையில் அங்க உறுப்பினர்கள் தீவிரமாக செயல் பட்டு வருகின்றனர் . ஒரு மாதம் முழுவதும் நடை பெறும் கொண்டாட்டங்கள் புத்தாண்டில் அதாவது ஜனவரி ஒன்றாம் தேதி மாலை போதுக்கூட்டத்தோடு நிறை பெறுகிறது.

கடந்த ஆறாம் தேதி துவங்கிய மட்டை பந்து ( கிரிக்கெட் ) போட்டிகள் நேற்றோடு ( 20-12-2009) நிறைவு பெற்றது. இதில் ஆறு ஓவர்கள் கொண்ட தொடரில் சித்திரங்கோடு அணி முதல் பாரிசையும். வேர்கிளம்பி அன்னை தெரசா அணி இரண்டாவது பரிசையும் பெற்றது.

பன்னிரண்டு ஓவர்கள் கொண்ட தொடரில் சித்திரங்கோடு அணி முதல் பாரிசையும் பிலான்காலை அணி இரண்டாவது பாரிசையும் பெற்றது .

31-12-2009 காலை 8.00 மணிக்கு மரம் நாடு விழாவும் அதை தொடர்ந்தது மாவட்ட அளவிலான கபடி போட்டியும் நடை பெறுகிறது. மாலை ஆறு மணியளவில் சிறுவர்களை விளையாட்டு போட்டியில் ஊக்குவிக்கும் விதமாக சிறுவர்களுக்கான கபடி போட்டியும் நடை பெறவிருக்கிறது .

1-1-2010 காலை 6.00 மணிக்கு மாரத்தான் ஓட்ட பந்தயமும் அதை தொடர்ந்து தடகள போட்டிகளும் நடை பெறும் . காலை பத்து மணிக்கு கைப்பந்து போட்டி நடைபெறும் .

மாலை 6.00 மணிக்கு பொதுக்கூட்டம் சிறுவர்களின் கலை நிகழ்ச்சியோடு நடைபெறும் . பொதுக்கூட்டத்தில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் . இன்னிசை நிகழ்ச்சியோடு கூட்டம் நிறைவு பெறும் .


தொடர்பு கொள்ள : T. சுரேஷ் குமார் ( தலைவர் ) 9597834173
J. ஜஸ்டின் ( செயலர் ) 9543698928
T. ராஜா டெல்வின் ( ஒருங்கிணைப்பாளர் ) 9444507745

0 comments:

Post a Comment

Updates Via E-Mail